7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்‍கு உத்தரவிடக்‍ கோரி நளினி தொடர்ந்த வழக்‍கு - விசாரணைக்‍கு உகந்ததல்ல எனக்‍கூறி மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

Jul 19 2019 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜீவ் காந்தி கொலை வழக்‍கில், தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் நடவடிக்‍கை எடுக்‍கக்‍ கோரி நளினி தொடர்ந்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு இயற்றிய தீர்மானத்திற்கு, ஆளுநர் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ஆளுநர் இதுவரை எந்த ஒருவொரு நடவடிக்‍கையும் எடுக்‍கவில்லை என்றும், தீர்மானத்தின் மீது விரைந்து ஆளுநர் நடவடிக்‍கை எடுக்‍க உத்தரவிடவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்‍கு, நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்‍கு வந்தது. வழக்‍கை விசாரித்த நீதிபதிகள், ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக, ஆளுநருக்‍கு உத்தரவிட முடியாது என தெரிவித்தனர். மேலும், நளினி தொடர்ந்த இந்த வழக்‍கு, விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00