தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Jul 19 2019 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 2009ம் ஆண்டு நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, நாட்டின் இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக அப்போதைய திமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து திரு. வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வைகோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.