வரும் 19-ம் தேதி முதல் பி.எட் சேர்க்கை விண்ணப்பம் வழங்கல் : உயர்கல்வித் துறை அறிவிப்பு
Jul 19 2019 1:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பி.எட் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரும் 19-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
உயர் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்பம் வரும் 19-ம் தேதி முதல் 28- ம் தேதி வரை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் விண்ணப்பம் வழங்கப்படும் - பொதுப்பிரிவினர் 500, ரூபாயும் எஸ்.சி., எஸ்டி, வகுப்பினர் 250 ரூபாயும் செலுத்தி, The Secretary Tamilnadu B.Ed ADMISSION. Chennai - 600 005 என்ற பெயரில் வரைவோயை எடுத்து, விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பங்கள், செயலர், தமிழ் நாடு பி.எட். மாணவர் சேர்க்கை, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம். காமராஜர் சாலை, திருவல்கிக்கேணி, சென்னை 600 005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்- வரும் 29- தேதி விண்ணப்பங்களை அளிக்க கடைசி நாளாகும் - சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்வியல் மேம்பாட்டு நிறுவனம், மதுரை தியாகராசர் பர்செப்டார் கல்லூரி உட்பட தமிழகத்தில் உள்ள 14 கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.