தமிழக மலை மாவட்டங்கள் - மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் நாளைமுதல் மிக கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Jul 18 2019 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக மலை மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில், நாளைமுதல், மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாகவும், தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாகவும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இதில் தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலத்தில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.