கன்னியாகுமரி கடற்பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை : வெறிச்சோடியது சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம்
Jul 18 2019 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி கடற்பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் உட்பட கடல் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை காணப்படுகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி ஆழ்கடல் பகுதிகளில் 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், கடல் அலை 3 புள்ளி 8 மீட்டருக்கு மேல் எழும்பும் என்பதால் விசை படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மீன்வளத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து, சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 300 விசை படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மிகவும் பரபரப்புடன் இயங்கும் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.