ராமநாதபுரத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு : பல மணி நேரமாக வீணாகும் குடிநீர் - அதிகாரிகள் அலட்சியம்
Jul 18 2019 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரத்தில், காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் இருந்து புதுமடம் செல்லும் வழியில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல மணி நேரமாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது. மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.