சென்னையில் காணாமல் போன 3 வயது குழந்தையை 6 மணிநேரத்தில் மீட்ட போலீசார் - மிரட்டி பணம் பறிக்‍க திட்டமிட்ட வீட்டு வேலைக்‍காரி காதலனுடன் கைது

Jul 19 2019 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் 3 வயது சிறுமியை கடத்தி, பெற்றோரிடம் பணம் பறிக்க முயற்சித்த பணிப்பெண்ணை, அவரது காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.

சென்னை அமைந்தகரை செனாய் நகரை சேர்ந்த அருள்ராஜ் - நந்தினி தம்பதி, தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களது 3 வயது மகள் அன்விகா தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். நேற்று வீட்டிலிருந்த சிறுமி அன்விகாவை திடீரென காணவில்லை. அருள்ராஜ் வீட்டில் வேலை பார்த்து வந்த, அம்பிகா என்ற பணிப்பெண்ணையும் காணவில்லை. சில மணி நேரம் கழித்து, நந்தினிக்கு செல்போனில் அழைப்பு விடுத்த அம்பிகா, தன்னையும் சிறுமியையும் மர்மநபர்கள் கடத்தியதாகவும், தங்களை காப்பாற்றும்படியும் கூறியுள்ளார். அதே செல்போனிலிருந்து, நந்தினியிடம் பேசிய மர்மநபர், இருவரையும் விடுவிக்க வேண்டும் என்றால், 60 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என மிரட்டினார். இதுகுறித்து, குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பணிப்பெண் அம்பிகாவே, தனது காதலன் கரிமுல்லா சயீத்துடன் சேர்ந்து கடத்தி நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து சென்னையை அடுத்த கோவளத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அம்பிகாவையும், அவரது காதலனையும் கைது செய்த போலீசார், அங்கிருந்து சிறுமியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00