பள்ளி பயோமெட்ரிக் இயந்திரத்தில் இந்தி திணிப்பு : அமைச்சர் அலட்சிய பதில்
Jul 19 2019 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவில் இந்தி மொழி திணிக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு, பயோமெட்ரிக் இயந்திரத்தில் இனிமேல் ஹிந்தி மொழி வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று அலட்சியமான பதிலை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் 70 இடங்களில் இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பட்டய கணக்கர் படிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் மயிலாப்பூரில் உள்ள பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு எந்திரத்தில் இந்தி மொழி இடம்பெற்றிருப்பது குறித்து அப்போது அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். பயோமெட்ரிக் இயந்திரத்தில் இனிமேல் இந்தி மொழி வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என அமைச்சர் அலட்சியமான பதிலை அளித்தார்.