ஏழுமலையான் கோயிலுக்கே நாள்தோறும் 70 ஆயிரம் பேர்தான் வருவதாக கூறிய எடப்பாடியின் நையாண்டி பேச்சு - பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச் ராஜா கடும் கண்டனம்
Jul 19 2019 1:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அத்திவரதர் தரிசனத்தின்போது கூட்டநெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததற்கு, அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் திறமையின்மையே காரணம் என பாஜக தேசிய செயலாளர் திரு. ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
அத்திவரதரை தரிசிக்க இவ்வளவு பேர் வருவார்கள் என அரசு எதிர்பார்க்கவில்லை என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலை தரிசனத்திற்கு கூட ஒருநாளைக்கு சுமார் 70 ஆயிரம் பேர் மட்டுமே வருவதாகவும், ஆனால் அத்திவரதர் தரிசனத்திற்கு ஒருலட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவதாகவும் கூறினார். எனவே, உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க கர்ப்பிணிகள் உடல்நலம் குன்றியவர்கள் அத்திவரதரை தரிசிக்க வரவேண்டாம் என்றும், எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இதற்கு டிவிட்டரில் பதிலளித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் திறம்பட பணியாற்றாததே அசம்பாவிதத்துக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். அலகாபாத் கும்பமேளாவில், 34 கோடி பேர் எவ்வித பிரச்சினையும் இன்றி நீராடியதாகவும், உத்தரபிரதே பாஜக அரசு நிர்வாகத் திறமையோடு பணியாற்றிதையும் அவர் சுட்டிக் காட்டினார்.