மதுரை செல்லூர் கண்மாயில் குடிமராமத்து பணிகளில் பல லட்சம் ரூபாய் முறைகேடு : விவசாயிகள் குற்றச்சாட்டு
Jul 19 2019 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை செல்லூர் கண்மாயில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளில், பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மதுரை செல்லூர் கண்மாய் குடிமராமத்து பணிகள் சுமார் 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமைச்சர் தலைமையில் தொடங்கியுள்ளது. இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டில், ஆளுங்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும், தமிழக அரசின் குடிமராமத்து பணிகளில் ஆளுங்கட்சியினர் போலியான குழுவை உருவாக்கி, முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் விவசாயிகள் குறை கூறினர்.