நீலகிரி மாவட்டம் கூடலூரில் துப்பரவு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் முறைகேடு? : நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
Jul 19 2019 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்பரவு பணியாளர்கள், பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்களுக்கு தினஊதியம் வழங்குவதில், முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததால், குப்பைகளை அகற்றும் பணியை புறக்கணித்து, தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக வழங்க வேண்டும் என்றும், அவர்கள் வலியுறுத்தினர்.