மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு - அடித்தட்டு மக்களுக்கு துயரங்களை அளிக்கும் : ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்

Jul 23 2019 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, அடித்தட்டு மக்களுக்கு மேலும் துயரங்களை அளிப்பதுடன், தனக்கு சாதகமானவர்களைக் கொண்டு கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தும் அரசுக்கு, ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவரவுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், திருச்சியில் ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், இதுகுறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஒய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். புதிய கல்விக்‍ கொள்கை, கல்வி வியாபாரத்தை அதிகரிக்கவே செய்யும் என்பதால், இதனை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெறவேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.

இதனிடையே, தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில், ஒய்வூதியர்களுக்கான பணப்பலன்களை வழங்காமல் இழுத்தடிப்பதால், பணப்பலனைப் பெறமுடியாமல் 5 பேர் இறந்துவிட்டதாகக் கூறி அங்கு போராட்டம் நடைபெற்றது. நீதிமன்றம் தீர்ப்பளித்தும், தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய பணிக்கொடையை வழங்காததால், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00