இ-ஃபைலிங் மூலம் வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு உதவ பணியாளர்கள் நியமனம் - வருமானவரித்துறை ஆணையர் பேட்டி
Jul 24 2019 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்த ஆண்டு வருமானவரி இலக்கு 92 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை ஆணையர் திரு.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகமான ஆயக்கர் பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் வருமானவரி கணக்கை செலுத்தாதவர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார். மூத்த குடிமக்களைத் தவிர்த்து அனைவரும் இ-ஃபைலிங் மூலம் வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இதற்கு உதவி செய்ய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் திரு.ரங்கராஜன் தெரிவித்தார்.