முதுமலை சரணாலய சாலையில் ஒய்யார நடைபோடும் கரடி : சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி
Jul 23 2019 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக சரணாலயத்தில் சாலையில் வாகனங்கள் முன்பு ஒய்யாரமாக நடந்து வரும் கரடி, சுற்றுலாப்பயணிகளை ரசிக்க வைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக சரணாலய பகுதியில் தற்போது நன்றாக மழை பெய்து பசுமை திரும்பியுள்ளது. இதனால் சரணாலயத்திலிருந்து இடம்பெயர்ந்த யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மீண்டும் சரணாலய பகுதிக்கு வந்துள்ளன. இதனால முதுமலை - மைசூர் தேசிய நெடுஞ்சாலை, மசினகுடி - முதுமலை நெடுஞ்சாலையில் வன விலங்குகளை காண முடிகிறது. இந்நிலையில் மசினகுடி - முதுமலை நெடுஞ்சாலையில் கரடி ஒன்று, பகல் மற்றும் இரவு நேரங்களில், வாகனங்கள் வந்தாலும் பயப்படாமல் ஒய்யாரமாக சாலையில் நடந்து செல்கிறது. இதனை இவ்வழியாக வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் இருந்தவாரே பார்த்து ரசித்து செல்கின்றனர்.