மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் - ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை செயல்படுத்த எதிர்ப்பு
Jul 23 2019 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களை மீண்டும் செயல்படுத்தினால், டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களை ஒட்டுமொத்தமாக திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரி மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த கூடாது எனவும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனவும் காவேரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக செல்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து, சரபோஜி மன்னர் அரசு கல்லூரியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களை மீண்டும் செயல்படுத்தினால், மாணவர்களை ஒட்டுமொத்தமாக திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரித்தனர்.