கஜா புயலால் வீட்டை இழந்தவர்களுக்‍கு போர்க்கால அடிப்படையில் தற்காலிக வீடுகளை கட்டித்தர வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

Aug 2 2019 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

கஜா புயலில் வீடுகளை இழந்தோருக்கு நிரந்த வீடுகளை கட்டித்தருவதற்கு முன்னதாக தற்காலிக வீடுகளை போர்க்கால அடிப்படையில் அமைத்துத்தர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் கரம்பயம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், கஜா புயலில் வீடு முற்றிலும் சேதமடைந்து என்றும் முற்றிலும் சேதமடைந்த ஓட்டு வீட்டுக்கு உரிய இழப்பீட்டை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முற்றிலும் சேதமடைந்த ஓட்டு வீடுகளுக்கு ஏன் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை? என அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் கஜா புயலால் முற்றிலும் சேதமடைந்த வீடுகள் அனைத்துக்கும் உரிய இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 5 ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டிமுடிக்கப்படும் என தமிழக அரசுத்தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அரசு நிரந்தர வீடுகளை கட்டித்தருவதற்குள், தற்காலிக வீடுகளை போர்க்கால அடிப்படையில் கட்டித் தர வேண்டும் என்றும் 3 மாதங்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்" எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00