தேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தல் : ஒருகோடி கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்
Aug 2 2019 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி, ஒருகோடி மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் திருச்சியில் நடைபெற்றது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும், ஒருகோடி மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம், காட்டூரில் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள், கையெழுத்து இயக்க போராட்டம் நடத்தினர். தனியார் கல்லூரி முன்பு நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் ஏராளமான, பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு, கையெழுத்திட்டனர்.