மேட்டூர் அணையின் நீர் மட்டம் மூன்று மாதங்களுக்கு பிறகு 50 அடியை தாண்டியது - கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு
Aug 2 2019 2:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேட்டூர் அணையின் நீர் மட்டம் சுமார் மூன்று மாத காலத்திற்கு பிறகு 50 அடியை எட்டியுள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதாலும் காவிரி நீரை, கர்நாடக அரசு போதிய அளவிற்கு தண்ணீரை தராததாலும், மேட்டூர் அணை வறண்டு போனது. இந்த நிலையில் கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அம்மாநில அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த 80 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 50 அடியை தாண்டியது. கர்நாடகாவில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.