சென்னையில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கான 2 நாள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கியது
Oct 3 2013 5:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்த 2 நாள் பயிற்சி கருத்தரங்கை இன்று தொடங்கியது. இதில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி திரு.பிரவீண்குமார் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார். முதல் நாளில் சென்னை, திருவள்ளூர், வேலூர், கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் அதிகாரிகளும், ஆட்சியர்களும் பங்கேற்றுள்ளனர். நாளை நடைபெறவுள்ள பயிற்சி கருத்தரங்கில் எஞ்சியுள்ள மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். வரும் 21, 22-ம் தேதிகளில் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், 27, 28-ம் தேதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.