மத்தியில், காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி அல்லாத மாற்று அணி - நாடு முழுவதிலும் உள்ள பெரும்பான்மையான மக்களின் விருப்பம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து
Oct 3 2013 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் - பாரதிய ஜனதா அல்லாத மாற்று அணி, மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது பெரும்பான்மையான மக்களின் விருப்பம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தேசிய செயலாளர் திரு. டி.ராஜா, இதனை தெரிவித்தார். மத்திய காங்கிரஸ் அரசின் மக்கள் விரோதப் போக்கு, அன்னிய முதலீடு, தாராள மயமாக்கல் உள்ளிட்ட பல கொள்கைகளில் காங்கிரஸிற்கும், பாரதிய ஜனதாவிற்கும் ஒருமித்த கருத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.