தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டதோடு, பொது மக்களின் பயன்பாட்டிற்காக புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தனர்

Jul 13 2013 11:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணையின்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டதோடு, பொது மக்களின் பயன்பாட்டிற்காக புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் வட்டங்களுக்கு உட்பட்ட வெங்கடாபுரம், தாசன்கொட்டாய், பாகலூர், வெங்கடராயபுரம், ஈச்சாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில், பகுதிநேர நியாய விலைக்கடைகளை அமைச்சர் கே.பி. முனுசாமி திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் கோணத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்திற்காக, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் திரு.கே.டி. பச்சைமால் கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கலந்துகொண்டு 120 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல், இனிப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த மேட்டுப்பாளையம் வடக்கு தெருவில், நேற்று நேரிட்ட திடீர் தீ விபத்தில், 7 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமைச்சர் திரு. ஆர். காமராஜ், உடனடியாக நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம், அரிசி உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், வீடுகளை இழந்தவர்களுக்கு புடவை, வேட்டி, பாத்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன.

வேலூரை அடுத்த சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், அமைச்சர் மாதவரம் திரு. மூர்த்தி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரத்தை அடுத்த பெரிய பட்டணத்தில், 6 லட்ச ரூபாய் செலவில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்குகளை அமைச்சர் திரு. சுந்தர்ராஜ் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, பரமக்குடி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவப் பிரிவை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு மகளிர் விடுதியில் அமைச்சர் திரு. எஸ். அப்துல் ரஹீம், அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00