தூத்துக்குடியில் நடைபெற்ற அதிநவீன துப்பாக்கி கண்காட்சி - மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கண்டுகளித்தனர்
Oct 1 2013 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் நடைபெற்ற அதிநவீன துப்பாக்கி கண்காட்சியில், பல்வேறு வகையான துப்பாக்கிகள் இடம்பெற்றன. இவற்றை மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ரைஃபிள் கிளப் கூட்டம் ஆட்சித் தலைவர் திரு. ரவிகுமார் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், மூத்தோர் பிரிவில் தங்கம் வென்ற திரு. விஜயவேல், ஆண்கள் பிரிவில் தங்கம் வென்ற திரு. அந்தோணிமாமல்லன், மாணவர் பிரிவில் வெண்கலம் வென்ற சேது ஆகியோருக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற துப்பாக்கி கண்காட்சியை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. துரை தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில், புள்ளி ஒன்று ஏழு ஏழு Air Rifle, புள்ளி இரண்டு இரண்டு Rifle, 124 இரட்டை குழல் துப்பாக்கி, Air Pistol உள்ளிட்ட பல்வேறு வகையான அதிநவீன துப்பாக்கிகள் இடம்பெற்றன. இந்தக் கண்காட்சியை ஏராளமான மாணவர்கள் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர்.