தொடர்ந்து 40 நிமிடம் செண்டை மேளம் வாசித்து கின்னஸ் சாதனை : வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார் நடிகர் ஜெயராம்
Jan 12 2020 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் தொடர்ந்து 40 நிமிடம் செண்டை மேளம் வாசித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற 350 கலைஞர்களுக்கு வெற்றிச் சான்றிதழ்களை நடிகர் ஜெயராம் வழங்கி பாராட்டினார்.
சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில், ஸ்ரீ அய்யப்ப பக்த சபா சார்பில், சென்னையில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் செண்டைமேளம் வாசிப்பதற்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கு பயிற்சிபெறும் 150 மாணவர்களுடன், கேரளாவில் இருந்து வந்திருந்த 200 செண்டைமேள கலைஞர்களும் நின்று 40 நிமிடம் செண்டை மேளம் வாசித்து அரங்கேற்றம் செய்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி, ஒரே நேரத்தில் 350 செண்டைமேள கலைஞர்கள் தொடர்ந்து 40 நிமிடம் வாசித்து கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டனர். இந்த கின்னஸ் முயற்சி வெற்றி பெற்றதாக உலக கின்னஸ் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அதற்கான வெற்றிச் சான்றிதழ்களை நடிகர் ஜெயராம் வழங்கினார். உலக கின்னஸ் சாதனை விருது, மகாலிங்கபுரம் கோவிலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.