விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு - கை, கால்களை கட்டிக்கொண்டு நீச்சலடித்து சாதனை
Jan 13 2020 6:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுவாமி விவேகானந்தரின் 158வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கடலில், கேரளாவை சேர்ந்த நீச்சல் வீரர் கை-கால்கள் கட்டியபடி நீச்சலடித்து சாதனை படைத்தார்.
சுவாமி விவேகானந்தரின் 158-வது பிறந்தநாள், தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த நீச்சல் வீரரும், அம்மாநில அரசின் சுற்றுலா வழிகாட்டியுமான திரு.ரதீஸ், கன்னியாகுமரி கடலில் இருந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் வரையிலான 800 மீட்டர் தூரத்தை கை, கால்களை கட்டிக்கொண்டு கடந்து சாதனை படைத்தார். அவரது சாதனையை சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவரும் பாராட்டினர்.