சமவெளிப் பகுதியில் மலைக் காய்கறி விவசாயம் : புதுச்சேரி விவசாயி சாதனை
Jan 13 2020 3:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய காலிஃபிளவர் பயிரை புதுச்சேரி விவசாயி ஒருவர் வெற்றிகரமாக சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளார்.
மலைப் பிரதேசங்கள் மற்றும் குளிர் பிரதேசங்களில் விளையக்கூடிய காலிபிளவர், கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் போன்றவை, சாதாரண விளைநிலங்களிலும் தற்போது சாகுபடி செய்யப்படுகிறது. புதுச்சேரியை அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ரகு என்ற விவசாயி, கடந்த 6 ஆண்டுகளாக காலிபிளவர் சாகுபடி செய்து, அதிக மகசூல் பெற்று வருகிறார். இதனை தாமே நேரடியாக விற்பனை செய்வதன் மூலம், அதிக லாபம் ஈட்டுவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.