தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் - தமிழில் மந்திரங்கள் முழங்க நடைபெற்ற சிறப்பு வேள்வி
Jan 22 2020 2:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி, தமிழில் மந்திரங்கள் முழங்க சிறப்பு வேள்வி நடைபெற்றது. குடமுழுக்கை சமஸ்கிருதத்தில் நடத்தக்கூடாது என்றும் அப்போது கோரிக்கை வைக்கப்பட்டது.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழில் மந்திரங்கள் முழங்க குடமுழுக்கை நடத்த வலியுறுத்தி, தஞ்சைப் பெரிய கோயில் மீட்புக் குழு சார்பில் இன்று மாநாடு நடைபெறுகிறது. முன்னதாக பதினெண் சித்தர் மடம் சார்பில் அங்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட சித்தர்கள் கலந்து கொண்டு தமிழில் மந்திரங்கள் முழங்க சிறப்பு வேள்வியை நடத்தினர். தமிழ் மொழியில் எவ்வாறு மந்திரங்கள் முழங்க வேண்டும் என்பதற்கு முன்னோட்டமாக இந்த வேள்வி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.