திருச்சி உறையூரில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை : முன்விரோதம் காரணமாக கொலையா? என விசாரணை
Jan 23 2020 3:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி உறையூரில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், இளைஞர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்த புகழேந்தி, கொலை வழக்கு தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட சென்றுள்ளார். அவரை வழிமறித்த ஒரு கும்பல், அவரை சராமாரியாக வெட்டி படுகொலை செய்தது. 2 மாதங்களுக்கு முன்னர் "ஜிம் மணி" என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கவே, புகழேந்தி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.