நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளை வேட்டையாடி வரும் புலி - கூண்டு வைத்து புலியை பிடிக்க மக்கள் வலியுறுத்தல்
Jan 23 2020 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, கால்நடைகளை வேட்டையாடும் புலியை பிடிக்க, வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை, புத்தூர்வயல், மண்வயல், கம்மாத்தி, கிளிச்செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 6 மாத காலமாக புலி நடமாட்டம் இருந்து வருவதாக, கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது குறித்து கிராம மக்கள் வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கடந்த 2 வாரங்களில் மூன்று மாடுகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளும் பலியாகியுள்ளன. உடனடியாக கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.