சிஐடியூ-வின் 16-வது அகில இந்திய மாநாடு தொடக்கம் : நாடு முழுவதிலும் இருந்து 2,200 பிரதிநிதிகள் பங்கேற்பு
Jan 23 2020 3:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிஐடியூ-வின் 16-வது அகில இந்திய மாநாடு, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதில், நாடு முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்து 200 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில், சிஐடியூ அகில இந்திய செயலாளர் திரு. தபன் சென், அகில இந்திய தலைவர் திருமதி ஹேமலதா, திரு. டி.கே. ரங்கராஜன் எம்பி, சிஐடியூ தமிழ்நாடு மாநில தலைவர் திரு. சௌந்தர்ராஜன் என நாடு முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்து 200 பிரதிநிதிகள், உலக தொழிலார் சம்மேளனம் தலைவர் திரு. மாவாண்டில் மக் வாய்பா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் சிஐடியு கொடியேற்றத்துடன், மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வரும் 27-ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இறுதி நாளில் சைதாப்பேட்டையில் இருந்து பேரணி தொடங்கி, ஒய்.எம்.சி.ஏ மைதானம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு தமிழ்நாடு மாநில தலைவர் திரு.சௌந்தர்ராஜன், விவசாயிகள் பிரச்சனை, தொழிலாளர் பிரச்சனை, வியாபாரிகளின் பிரச்சனை, பொதுமக்களின் பிரச்சனைகள், வேலையில்லா திண்டாட்டம், குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றார்.