சைதாப்பேட்டை காவல் நிலைய காவலர் தூக்‍கிட்டு தற்கொலை : பணிச்சுமையால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்

Jan 23 2020 8:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் ஒருவர் இன்று தூக்‍கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் வைரமுத்து. இவரது மனைவி அமல புஷ்பம். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்த வைரமுத்து, இன்று காலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடும் பணிச்சுமை காரணமாக வைரமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, வைரமுத்துவின் உடலை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பணிச்சுமை காரணமாக காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00