இலவச பயண அட்டை வழங்காததைக் கண்டித்து நாகையில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Jan 23 2020 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கல்லூரி திறந்து பல மாதங்கள் ஆகியும், இலவசப் பேருந்து பயண அட்டை வழங்காததைக் கண்டித்து நாகையில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசைக் கண்டித்தும், பயண அட்டையை விரைந்து வழங்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.