திருநெல்வேலி மாவட்டம் வடக்குப் பச்சையாறு அணையில் வரும் 27-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க உத்தரவு
Jan 23 2020 6:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருநெல்வேலி மாவட்டம் வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து, வரும் 27-ம் தேதி முதல் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. நாங்குநேரி வட்டம் பத்தை, களக்காடு, வடமலை சமுத்திரம் உள்ளிட்ட 14 கிராமங்களில் உள்ள 9 ஆயிரத்து 592 புள்ளி 91 ஏக்கர் நிலங்கள் பாசனத்துக்கு வரும் 27-ம் தேதி முதல் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறக்க உத்தரவிட்டு இருப்பதாகவும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.