தமிழகத்தில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை சரிவு - தமிழக அரசின் முயற்சி படுதோல்வி அடைந்திருப்பதாக, கல்வியாளர்கள் கருத்து

Jan 23 2020 8:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் நடப்பாண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 17 சதவீதம் குறைந்துள்ளது.

2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு டிசம்பர் 2-ம் தேதி முதல் ஜனவரி 6-ம் தேதி வரை நடைபெற்றது. நடப்பு ஆண்டில் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 74 ஆயிரம் அதிகரித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 17 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த ஆண்டு தமிழ் மொழியிலும் நீட் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்கள் என அனைவரும் நீட் தேர்வு எழுதுவதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதற்கு மாறாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது. நீட் தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் அதிகமாக இருப்பதும், ஆள் மாறாட்ட சம்பவங்கள் நடப்பதும் மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால், நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்திருக்கலாம் என ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00