பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்‍கான வினாத்தாள் தொகுப்பு - பள்ளி கல்வித்துறை வெளியீடு

Jan 23 2020 8:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்‍கான வினாத்தாள் தொகுப்பை, பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்‍காக தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் ஒரே தொகுதியாக வினாத்தாள் தொகுப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்‍கு, கணிதப்பாட வரிசைக்‍கு வினாத்தாள்களின் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் இணைந்து, தமிழ் மற்றும் ஆங்கில வழிக்‍கு தனித்தனியாக, வெளியிடப்பட்டுள்ளன. இப்புத்தகங்கள் வரும் 27-ம் தேதி முதல், குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை மையங்களில் கிடைக்‍கும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு அறிவியல் பாட பிரிவிற்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஒரே தொகுதியாகவும், கலைப்பாட பிரிவிற்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வினாத்தாள் தொகுப்பு ஒரே தொகுதியாக கிடைக்‍கும் என கூறப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் கலைப்பாடப்பிரிவிற்குரிய வினாத்தாள் தொகுப்பு அச்சிடும் பணி முடிவடையாமல் உள்ளதால், பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் விற்பனைக்‍கு கிடைக்‍கும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. சென்னையில் 3 மையங்கள் அமைக்‍கப்பட்டு அதில் இப்புத்தகங்களின் விற்பனை மேற்கொள்ளப்படும். இது தவிர மாநிலம் முழுவதும் 31 மையங்களில், இந்த வினாத்தாள் தொகுப்பு வழங்க நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00