பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கான வினாத்தாள் தொகுப்பு - பள்ளி கல்வித்துறை வெளியீடு
Jan 23 2020 8:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கான வினாத்தாள் தொகுப்பை, பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் ஒரே தொகுதியாக வினாத்தாள் தொகுப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, கணிதப்பாட வரிசைக்கு வினாத்தாள்களின் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் இணைந்து, தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கு தனித்தனியாக, வெளியிடப்பட்டுள்ளன. இப்புத்தகங்கள் வரும் 27-ம் தேதி முதல், குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு அறிவியல் பாட பிரிவிற்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஒரே தொகுதியாகவும், கலைப்பாட பிரிவிற்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வினாத்தாள் தொகுப்பு ஒரே தொகுதியாக கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் கலைப்பாடப்பிரிவிற்குரிய வினாத்தாள் தொகுப்பு அச்சிடும் பணி முடிவடையாமல் உள்ளதால், பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 3 மையங்கள் அமைக்கப்பட்டு அதில் இப்புத்தகங்களின் விற்பனை மேற்கொள்ளப்படும். இது தவிர மாநிலம் முழுவதும் 31 மையங்களில், இந்த வினாத்தாள் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.