குரூப்-4 தேர்வு முறைகேடு புகார் - ராமநாதபுரத்தில் சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
Jan 23 2020 8:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததன் எதிரொலியாக, ராமநாதபுரத்தில் உள்ள சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வை, தமிழகம் முழுவதும் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய 2 மையங்களில் தேர்வு எழுதிய 57 பேர், தரவரிசைப்பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றிருந்தனர். இதனால், இந்த மையங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்தது. குருப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது உறுதிசெய்யப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சர்ச்சையில் சிக்கிய 20 பேரிடம் விசாரணை நடத்திய டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அவர்களுக்கு கடந்த 13-ம் தேதி மறுதேர்வு நடத்தியது.
இந்த நிலையில், ராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்களை ரத்து செய்துவிட்டதாக டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.