குரூப்-4 தேர்வு முறைகேடு புகார் - ராமநாதபுரத்தில் சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

Jan 23 2020 8:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததன் எதிரொலியாக, ராமநாதபுரத்தில் உள்ள சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வை, தமிழகம் முழுவதும் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய 2 மையங்களில் தேர்வு எழுதிய 57 பேர், தரவரிசைப்பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றிருந்தனர். இதனால், இந்த மையங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்தது. குருப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது உறுதிசெய்யப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது. இதையடுத்து, சர்ச்சையில் சிக்கிய 20 பேரிடம் விசாரணை நடத்திய டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அவர்களுக்கு கடந்த 13-ம் தேதி மறுதேர்வு நடத்தியது.

இந்த நிலையில், ராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்களை ரத்து செய்துவிட்டதாக டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00