வேலூர் மாவட்டம் சென்னாங்குப்பம் பகுதியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
Jan 23 2020 7:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் மாவட்டம் சென்னாங்குப்பம் பகுதியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பதர வைக்கும் அந்த காட்சிகள் சிசிடிவில் பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் மகள் நிவேதினி சென்னாங்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி நிவேதினி பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்ததாக கூறி கே.வி.குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாணவியின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் கொடுத்துள்ளது. ஆனால் மாணவி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.