திருத்தணி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் துன்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் திருவள்ளூர் ஆட்சியரிடம் மனு
Jan 23 2020 7:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருத்தணி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக துன்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் பயிலும் தாழ்த்தப்பட்ட இன மாணவர்களை அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பு மாணவர்கள் துன்புறுத்தி வருவதுடன் தாக்குதலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.