நெல்லையில் அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அ.ம.மு.க நிர்வாகிகள் மனு
Jan 23 2020 7:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லையில் மாண்புமிகு அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக அனுமதி கேட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அ.ம.மு.க நிர்வாகிகள் மனு அளித்தனர். மாண்புமிகு அம்மா பிறந்தநாள் பிப்ரவரி 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதற்காக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்டு, அ.ம.மு.க நிர்வாகிகள் மனு அளித்தனர். இதையடுத்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை கழக நிர்வாகிகள் பார்வையிட்டனர்.