திமுக - காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த கன்னியாகுமரி மாவட்ட எம்.எல்.ஏக்களுக்கு வெட்கம் இருக்கிறதா? : முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனம்
Jan 23 2020 8:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சட்டசபையில் பேசமுடியாத திமுக - காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த கன்னியாகுமரி மாவட்ட எம்.எல்.ஏக்களுக்கு, வெட்கம் இருக்கிறதா? என முன்னாள் மத்திய அமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வில்சன் கொலை விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியினர் கொலையாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.