800 வகை உணவுகளை தயாரிக்கும் ரோபோட்டிக் இயந்திரம் மதுரையில் முதன்முறையாக அறிமுகம்
Jan 23 2020 8:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
800 வகையான உணவுகளை தயாரிக்கும் ரோபோட்டிக் சமையல் இயந்திரம் மதுரையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் ஆயிரத்து 600 பேருக்கு உணவு தயாரிக்கும் திறன் கொண்ட இந்த ரோபோ கிச்சனை "ரோபோ செஃப்" என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மதுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ரோபோ கிச்சன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இயந்திரம் நூறு சதவீதம் தானியங்கியாகும். இதன் மூலம், சைவம், அசைவம் என 800 வகை உணவுகளை ஒரே நேரத்தில் தயாரிக்க முடியும் என்றும், உணவுகளின் சுவைகளில் மாற்றம் செய்வதற்கான புரோகிராம் வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் பயன்பாட்டால், தண்ணீர், கேஸ் சிலிண்டர் மற்றும் நேரம் மிச்சமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.