நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

Jan 23 2020 8:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில், தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் திரு.விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தலை நடத்த அனுமதி அளித்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அதன்படி ஜூன் 23-ம் தேதி திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்பட்டது.

பின்னர், தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்கவில்லை என்பதால் நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக்கோரி உறுப்பினர்கள் ஏழுமலை உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து, நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி இருவரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இது தொடர்பான அனைத்து வழக்குகளிலும் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00