காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மீட்பு - எர்ணாகுளம் கழிவுநீர் ஓடையில் கண்டெடுக்கப்பட்டது இத்தாலி தயாரிப்பு துப்பாக்கி என தகவல்
Jan 23 2020 8:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எஸ்.ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, அப்துல் சமீம் மற்றும் தவுபிக் ஆகிய இருவரையும், தனிப்படை போலீசார் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், இக்கொலை சம்பவம் தொடர்பாக ஆயுதம் வழங்கியவர்கள், பண உதவி செய்தவர்கள் குறித்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தநிலையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை கைப்பற்ற, தனிப்படை போலீசார் இருவரையும் கேரளா அழைத்துச் சென்றுள்ளனர். இதனிடையே, கொலையாளிகள் தாங்கள் பயன்படுத்திய துப்பாக்கியை கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில், வீசி எறிந்ததாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள கழிவு நீர் ஓடையில் இருந்து, துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை தனிப்படை போலீசார் மீட்டனர்.
இந்த துப்பாக்கி இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என்றும், ராணுவத்தில் பயன்படுத்தப்படுவது என்றும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.