அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம் : டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கழக ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்
Jan 26 2020 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெறவுள்ள மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கழக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டையில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதிக்கழக, மாவட்ட, சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. வரும் பிப்ரவரி 24-ம் தேதி, மாண்புமிகு அம்மா பிறந்தநாளையொட்டி, நெல்லை மாநகர் மாவட்டம் கங்கைகொண்டான் பகுதிக்கு வருகை தரும் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வீடுவீடாகச் சென்று புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, வரும் உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற கடுமையாக பாடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் திரு.S.பரமசிவ ஐயப்பன், கழக அமைப்புச் செயலாளர் திரு.A.P.பால் கண்ணன், அம்மா தொழிற்சங்க பேரவை பொருளாளர் திரு.நெல்லை பரமசிவம், நெல்லை மாநகர் மாவட்ட கழகப் பொருளாளர் திரு.ஜோதி ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.