முதுமலை முகாமில் யானைகள் அணிவகுப்புடன் ஏற்றப்பட்ட தேசியக்கொடி - சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பு
Jan 26 2020 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகள் அணிவகுத்து நிற்க தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதனை சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. 24 யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுத்து நிற்க, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகபிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது வரிசையாக நின்ற யானைகள் தும்பிக்கையை தூக்கி பிளிறி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய காட்சியை அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணிகள் வியந்து பார்த்தனர்.