குடியுரிமை சட்டம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு - தஞ்சையில் பெரும்பாலான ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
Jan 26 2020 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்தச் சட்டம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சையில் நடைபெற்ற ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அரசூர், பூதலூர், நரசிங்கபுரம், தளவாய்பாளையம், கத்திரிநத்தம், கறம்பக்காடு போன்ற பகுதிகளில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை கிராமங்களில் அனுமதிக்க மாட்டோம் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக ரத்து வேண்டும்- 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.