களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொல்லப்பட்ட வழக்‍கு - விசாரணை விவரங்களை நீதிமன்றத்தில் தாக்‍கல் செய்ய போலீசார் நடவடிக்கை

Jan 26 2020 5:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் இதுவரை கிடைத்த விவரங்களை போலீசார் நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி அருகே களியக்காவிளை சோதனை சாவடியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அப்துல் சமீம், தௌபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்திய,துப்பாக்கி, கத்தி, கொலையாளிகளின் பை, துணி மற்றும் அதிலிருந்த ரசீது போன்றவை கைபற்றப்பட்டுள்ளன. கொலை செய்தது எப்படி என்பது தொடர்பாக சம்பவ இடத்தில் குற்றவாளி நேற்று காவல்துறையினர் முன்பாக நடித்து காண்பித்தனர். இந்நிலையில் குற்றவாளிகளின் செயல்பாடுகள், அவர்களிடமிருந்து பெறப்பட்ட விபரங்கள், ஆயுத பரிமாற்றம் போன்ற பல்வேறு விபரங்களை போலீசார் நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் குற்றவாளிகளுக்கு அகில இந்திய அளவிலான தொடர்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்த தங்களுக்கு போதிய கால அவகாசம் தேவை படுவதால் மீண்டும் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00