தோடர் இன பழங்குடியின மக்கள் கொண்டாடிய பாரம்பரிய திருவிழா : கொண்டாட்டங்களை வியந்து ரசித்த சுற்றுலா பயணிகள்

Jan 26 2020 6:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

உதகை அருகே தோடர் இன பழங்குடியின மக்கள் கொண்டாடிய பாரம்பரிய திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மலை மாவட்டமான நீலகிரியில் தோடர், கோத்தர், பனியர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் என 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்தது வருகின்றனர். இவர்களில் தோடர் பழங்குடியின மக்கள் மந்து என்ற வனப்பகுதியை ஓட்டியுள்ள பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மொற்பர்த் என்ற விழாவை கொண்டாடி வருகின்றனர். அதன்படி முத்தநாடு மந்தில் தோடரின மக்கள் பாரம்பரிய திருவிழாவை கொண்டாடினர். ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த விழாவில் கலந்துகொண்டோர் தங்களது பாரம்பரிய பாடலுடன் நடனமாடி மகிழ்தனர். இறுதியாக தோடரின இளைஞர்கள் தங்களுடைய வீரத்தை வெளிபடுத்தும் வகையில் இளவட்ட கல்லை ஒவ்வொருவராக தூக்கி திறமையை வெளிபடுத்தினர் இந்த வினோத பாரம்பரிய விழாவினை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00