தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

Jan 27 2020 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சை பெரியகோவிலின் குடமுழுக்கு நிகழ்வுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை பெரியகோவிலின் குடமுழுக்கு விழா வரும் 5ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், குடமுழக்கு விழாவுக்கு தடை விதிக்கக் கோரி சரவணன் என்ற வழக்கறிஞர், நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக இன்று முறையீட்டார். தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் நடத்த திட்டமிட்டுள்ளதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிட்டுள்ளதால் வழக்கை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அரசுத்தரப்பில் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தொடர்பான வழக்குகளை நாளை பட்டியலிடுமாறு கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் தஞ்சை பெரியகோவில் தொடர்பான அனைத்து வழக்குகளையும் நாளைக்கு ஒத்திவைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00