சென்னையில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுவந்த மூன்று பேர் கைது - 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்
Jan 27 2020 6:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் 2 ஆண்டுகளாக இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுவந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையின் பெரம்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருடு போவதாக வேப்பேரி போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, சி.சி.டி.வி. காட்சி உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 3 பேர் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை திருடிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக போலீசாரிடம் சிக்காமல் மூவரும் தப்பி வந்த நிலையில் நேற்றிரவு புரசைவாக்கம் பகுதியையடுத்த டவுட்டன் பாலத்திற்கு கீழே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருட முயன்றனர். அப்போது அவர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.