ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு - விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு
Jan 27 2020 6:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக, மத்திய அரசு, கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும், மக்களின் கருத்துகளை பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அனுமதியை பெற தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், ஹைட்ரோகார்பன் திட்டத்தால் காவிரி டெல்டாவில் விவசாயம் அழியும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.